தமிழக செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 36 மீனவர்களை கைது செய்து, 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்களையும், 5 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் நேரடியாக தலையிட்டு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்