தமிழக செய்திகள்

விராட்சிலையில் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

விராட்சிலையில் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

திருமயம் தாலுகா விராட்சிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மஞ்சுவிரட்டு நடைபெறும் என சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதுகுறித்து பனையப்பட்டி இன்ஸ்பெக்டர் பாரதி கூறுகையில், ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31-ந் தேதி வரை தான் மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்கு பின் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி இல்லை. எனவே மஞ்சுவிரட்டு தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்