கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம்10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றது.

சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் 624 இடங்கள் உள்ளன. அதற்கு, 7 ஆயிரத்து 42 விண்ணப்பங்கள் வந்தன. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 43 இடங்கள் உள்ளன. இதற்கு, 16 ஆயிரத்து 984 விண்ணப்பங்கள் குவிந்தன.

இந்த நிலையில், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் தரவரிசை மற்றும் கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி