தமிழக செய்திகள்

அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது.

சிவகாசி, 

அ.தி.மு.க. விருதுநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சாத்தூர் நகர பகுதியில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் குறைகளை எடுத்து கூறி வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு, தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார். இதில் நகர செயலாளர் இளங்கோவன், கவுன்சிலர் கார்த்திக், துணை செயலாளர் தங்கப்பாண்டியன், மகளிர் அணி செயலாளர் வீரலட்சுமி, ஜெயந்தி, ரமேஷ், மகேந்திரன், மாதவன், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT