செங்கோட்டை:
அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் தென்காசி மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தென்காசி அருகே பிரானூர் பார்டரில் நடந்தது. கூட்டத்துக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளா பொய்கை சோ.மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா. தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, தலைமை கழக பேச்சாளாகள் பழனிக்குமார், எஸ்.டி.கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினா. எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளா எஸ்.கே.சுப்பிரமணியன் பேசினார்.
கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச்செயலாளா சிவஆனந்த், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா கண்ணன் என்ற ராஜூ உள்பட பலா கலந்து கொண்டனா.