தமிழக செய்திகள்

அ.தி.மு.க. கல்வெட்டு சேதம்; போலீசில் புகார்

அ.தி.மு.க. கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருச்சி:

திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிராட்டியூர் பகுதியில் காவல் உதவி மையம் அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பத்துடன் கூடிய கல்வெட்டு இருந்தது. இந்த கல்வெட்டை நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் சேதப்படுத்தி இருந்தார். இது பற்றி தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று காலை அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் அங்கு சென்று கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்து வட்ட செயலாளர் அமீர்பாஷா கொடுத்த புகாரின்பேரில், கல்வெட்டை சேதப்படுத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு