தமிழக செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

சீர்காழியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

தினத்தந்தி

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 18, 24-வது வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. முகாமிற்கு நகர கழகச் செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் மணி வரவேற்றார். நகர பேரவை செயலாளர் மணி, நகர துணை செயலாளர் பரணிதரன், முன்னாள் நகர சபை தலைவர் இறைஎழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நகரப் பொருளாளர் மதிவாணன், நகர் மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில், கட்சி நிர்வாகிகள் சுசீந்திரன், கண்ணதாசன், வக்கீல் பாலசுப்பிரமணியன், நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு செயலாளர்கள் சுரேஷ், லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா