கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பா.ஜ.க.வில் இணையப் போவதாக வெளியான தகவல்... முற்றுப்புள்ளி வைத்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டுவிட்டு எதிரணிக்கு தாவி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி திடீரென பா.ஜ.க.வில் சேர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் நாளை பல்லடத்தில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில், மேலும் சிலர் பா.ஜ.க.வில் இணையலாம் என சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. அந்த வகையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் எக்ஸ் தளத்தில் 3 வருடங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட "என் இறுதி மூச்சு உள்ளவரை அ.இ.அ.தி.மு.க. மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன் என்பதை தெளிவு படுத்துகிறேன்" என்ற பதிவை பகிர்ந்து, "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன்! உண்மையுடன்!" என்று தெரிவித்து உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்