தமிழக செய்திகள்

கட்டண உயர்வுக்கு பின்னும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் தான் இயங்குகிறது அமைச்சர் சொல்கிறார்

பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு பின்னும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் தான் இயங்குகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #BusFareHike

சென்னை

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சோடா பாட்டில் வீசுவோம் என ஜீயர் பேசுவது பொறுப்புள்ள பேச்சு கிடையாது.

கனத்த இதயத்துடன் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம் உயர்வு குறித்து, ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்ப தயாராக இல்லை.

பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு பின்னும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் தான் இயங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

#Jayakumar #BusFareHike