தமிழக செய்திகள்

சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்றது பேரணி அல்ல போர் அணி - மு.க.ஸ்டாலின்

சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்றது பேரணி அல்ல போர் அணி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மத்திய அரசை கண்டித்து தலைவர்கள் கோஷம் எழுப்பினர். குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி தலைவர்கள் முழக்கம் எழுப்பினர்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்றது பேரணி அல்ல போர் அணி. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும். திமுக பிரபலம் அடைய விளம்பரத்திற்காக துணை நின்ற அதிமுகவுக்கு நன்றி. பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி என கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு