தமிழக செய்திகள்

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

அதிமுக வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பு இருநீதிபதிகள் அமர்வு முன்பு முறையிட்டுள்ளது.

நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என இருதரப்பும் பதில் அளித்த நிலையில் இன்று விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணை, இறுதி விசாரணையா? அல்லது இடைக்கால நிவாரணமா? என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்