தமிழக செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் இன்று முதல் 4 நாட்கள் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 4 நாட்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அந்த வகையில், இந்த 9 மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று முதல் 4 நாட்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு