தமிழக செய்திகள்

வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

திருமங்கலம், 

திருமங்கலம் மதுரை மெயின் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டிச் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வங்கியில் அலாரம் திடீரென ஒலிக்க தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அலாரம் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைய வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் வந்து வங்கியை திறந்து பார்த்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அலாரம் ஒலித்தபடியே இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஊழியர்கள் அலாரத்தை நிறுத்தினர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு