தமிழக செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி - ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வார இறுதி விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

தென்காசி,

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள், தற்போது குற்றாலம் மெயின் அருவிக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். அதோடு வார இறுதி விடுமுறை என்பதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி