தமிழக செய்திகள்

முன்னாள் மாணவிகள் பொன்விழா கொண்டாட்டம்

முன்னாள் மாணவிகள் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1972-73-ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த முன்னாள் மாணவிகள் 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி பொன்விழா கொண்டாடினர். இந்நகர் பெரியகாளியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொன்விழா கொண்டாட்டத்தின் போது அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியைகள் காஞ்சனா, புஷ்பமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும் முன்னாள் மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT