கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக அம்ரித் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக அம்ரித்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

நீலகிரி,

கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட இன்னசென்ட் திவ்யா, கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டு, கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். எஸ்.பி.அம்ரித், இதற்கு முன்பு நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பதவி வகித்து வந்துள்ளார்.

முன்னதாக யானை வழித்தட வழக்கில் நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்து வந்த இன்னசென்ட் திவ்யாவை மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்தது. தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டராக ( கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தடையை சுப்ரீம் கோர்ட் விலக்கியது. இந்த சூழலில் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை