தமிழக செய்திகள்

விருத்தாசலத்தில் ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலி

விருத்தாசலத்தில் ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் உயிழந்தா.

தினத்தந்தி

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிக்கண்ணன் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் வசித்து வந்தார். இவர் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் அருகில் ரெயிலில்அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் விரைந்து சென்று மணிக்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணிக்கண்ணன் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரெயில் மோதி இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்