தமிழக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலி

திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலியானார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருவள்ளூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்த முதியவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா தக்கோலம் மண்டபம் தெருவை சேர்ந்த விவசாயி லோகநாதன் (வயது 61) என்பதும், இவர் நேற்று சின்னம்மாபேட்டை பஜாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்ல திருவாலங்காடு ரெயில் நிலைய கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சரக்கு ரெயில் மோதி இறந்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்