தமிழக செய்திகள்

மன்னார்குடியில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது

மன்னார்குடியில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது

தினத்தந்தி

தினத்தந்தி செய்தி எதிரொலியாக மன்னார்குடியில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது.

திறந்துகிடந்த கழிவுநீர் கால்வாய்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் தெற்கு வீதியில் கழிவுநீர் கால்வாய் சரிவர மூடப்படாமல் திறந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். இரவு நேரங்களில் கால்வாயில் விழுந்து காயமடைந்தனர். உடனடியாக இந்த கழிவு நீர் கால்வாயை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

மூடப்பட்டது

இதுகுறித்து செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் தற்போது கான்கிரீட் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நன்றி தெரிவித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை