தமிழக செய்திகள்

ஆந்திர அமைச்சர் ரோஜாவின் கணவர் கார் கண்ணாடி உடைப்பு - சென்னையில் பதற்றம்

சென்னையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், குற்றப்பத்திரிகை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆர். கே.செல்வமணி. நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர்.

பெப்சி திரைப்பட இயக்கத்தின் தலைவராக இருந்தவர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக உள்ளார். இவரின் வீடு விருகம்பாக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்