தமிழக செய்திகள்

பள்ளிக்கூட சுவர் சரிந்து விழுந்து ஆந்திர மாநில தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி குருப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது.

தினத்தந்தி

தர்மபுரியில் இருந்து கர்நாடகா வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி குருப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

பயன்பாட்டில் இல்லாத 4 கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியபோது, எதிர்பாராதவிதமாக பள்ளிக்கூட சுவர் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடங்களுக்கு இடையே நின்றிருந்த ஆந்திராவைச் சேர்ந்த சீனு (வயது 40) என்ற ஒப்பந்தத் தொழிலாளி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்