தமிழக செய்திகள்

'அண்ணாமலை கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு ஆசைப்படுகிறார்' - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு பேராசைப்படும் அண்ணாமலையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க. அணையப்போகிற விளக்கு என்றும், தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்பதையும் பார்ப்போம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"அ.தி.மு.க. என்பது கலங்கரை விளக்கம். அண்ணாமலைக்கு அரசியல் அறிவு மிகவும் குறைவாக உள்ளது. அவர் கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு ஆசைப்படுகிறார். அவரது சிந்தனையும், பேச்சும், அணுகுமுறையும் வெறுக்கத்தக்க வகையில் இருக்கிறது. பா.ஜ.க. 100 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கட்சி என்றாலும் கூட, அண்ணாமலை தமிழ்நாட்டில் நியமன பதவியில் இருப்பதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் ஏதோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப்போல் பேசி வருகிறார். எனவேதான் சொல்கிறேன், கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு பேராசைப்படும் அண்ணாமலையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்."

இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்