தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,38,772 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,280 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,289 இல் இருந்து 1,280 ஆக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரொனாவில் இருந்து மேலும் 1,453 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,30,654 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 15,650 ஆக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவில் இருந்து மேலும் 19 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,833 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.