தமிழக செய்திகள்

கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம்

2011-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கல்வித்துறை கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

சிவகங்கை நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1-1-2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதி இல்லாத கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 14-6-2018-ல் வெளியிடப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக மீண்டும் 6 மாத கால அவகாசம் நீடிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம். இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்