தமிழக செய்திகள்

வளவனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

வளவனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தினத்தந்தி

வளவனூர், 

வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக பாதுகாப்பு துறை, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர் பிரேமலதா, சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் முருகன் வரவேற்புரையாற்றினார். இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியபடி முக்கிய வீதி வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ் நன்றி கூறினார்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து