தமிழக செய்திகள்

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை

நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்

தினத்தந்தி

நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

திடீர் சோதனை

உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகப்ரியாவின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

வெள்ளிக்கிழமை

வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுவதில்லை.

எனவே அவ்வாறு அனுப்பப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்