தமிழக செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காவல் துறையின் சார்பில் போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்