தமிழக செய்திகள்

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

SCROLL FOR NEXT