தமிழக செய்திகள்

புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

தினத்தந்தி

பிற மாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தமாக விருதுநகர் மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் இணையதளத்தில் பதிவு செய்த தகுதியான தொழிலாளர்களில் இதுநாள் வரை ரேஷன் கார்டு பெறாத தொழிலாளர்களுக்கு புதிய மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.எனவே பிற மாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தமாக விருதுநகர் மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் இதுவரை புதிய மின்னணு ரேஷன் கார்டு பெறாத தொழிலாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.பின்னர் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் இருந்து உரிய படிவத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்தி புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி