தமிழக செய்திகள்

கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானைக்கு உடல்நலம் பாதிப்பு.!

அரிக்கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால், அதற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை,

கேரளா மற்றும் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்திவந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. தற்போது அரிக்கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால், அதற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே அங்குள்ள யானைக்கூட்டத்துடன் சேராமலும், முறையாக உணவை உட்கொள்ளாமலும் அதே இடத்தில் தனியாக சுற்றிவருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

யானையை தொடர்ந்து கண்காணித்துவரும் மருத்துவ குழுவினர், அதற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துவருகின்றனர். மேலும், யானை ஊருக்குள் வராத வகையில் தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...