தமிழக செய்திகள்

அர்ஜுனன் குளத்தை சீரமைக்க வேண்டும்

ஆரணி அருகே அர்ஜுனன் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினத்தந்தி

ஆரணி

ஆரணி- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் முள்ளிப்பட்டு ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதி அருகில் அர்ஜுனன் குளம் பாழடைந்து இருந்தது.

இதனை முன்பு இருந்த கலெக்டர் கந்தசாமி, கலெக்டரின் பொது நிதியில் இருந்து குளம் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டு குளம் சீரமைக்கப்பட்டது.

மேலும் அந்த இடத்தை சுற்றிலும் சிறிய பூங்கா மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம், ஒரு டீ ஸ்டால் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன.

பின்னர் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அடுத்து வந்த கலெக்டர் இதனை கண்டு கொள்ளாமல் விட்டதால் அர்ஜுனன் குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

எனவே, அர்ஜுனன் குளத்தை இப்போது உள்ள கலெக்டர் சீரமைத்து பழைய கலெக்டரின் கனவை நினைவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து