தமிழக செய்திகள்

போலீசாரிடம் தகராறு செய்தவர் கைது

தினத்தந்தி

ஓசூர்:

ஓசூர் அட்கோ போலீசார் பஸ்தி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். அவரிடம் விசாரிக்க முயன்றபோது மது போதையில் இருந்த அந்த நபர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், போலீசார் மீது பெட்ரோலை ஊற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் விசாரணையில் அந்த நபர் சின்னகானப்பள்ளியை சேர்ந்த வடிவேல் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்