தமிழக செய்திகள்

பாலக்கோடு அருகேமனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது

தினத்தந்தி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி பெருமாள் கோவில் நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியா பாலக்கோட்டில் உள்ள கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரியா தான் வேலை செய்யும் கார்மென்ட்ஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வடிவேல் அவரை தேடி வந்தார். அந்த சமயம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த வடிவேல் கட்டையால் மனைவியை சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு