தமிழக செய்திகள்

இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது

தினத்தந்தி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் குணா (வயது 23) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண்ணுக்கு திருமணம் முடிந்த பின்னர் குணாவுடன் இருந்த பழக்கத்தை துண்டித்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற குணா, அவரை உல்லாசத்துக்கு அழைத்தாராம். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் அவருடன் வாக்குவாதம் செய்த குணா அவரை தாக்கி மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சிங்காரப்பேடடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் குணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்