தமிழக செய்திகள்

தர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது

தர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தர்மபுரி அருகே உள்ள அல்லியூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 47) என்பவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருந்த 35 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜூவை கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்