தமிழக செய்திகள்

விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது

விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கே.புதுப்பட்டியில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா என்ற வேலு (வயது 27) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், கடந்த மே மாதம் 2-ந்தேதி எஸ்.புதூர் அருகே, கே.இடையபட்டியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவரது வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகையை திருடியவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சிவாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து