தமிழக செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சுரைக்காய்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் சந்தேகமளிக்கும் வகையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திப்பிரெட்டிஅள்ளியை அடுத்த ராமதாஸ் நகரை சேர்ந்த பெரியசாமி (வயது 45) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT