தமிழக செய்திகள்

பொம்மிடி அருகேதொழிலாளியை கல்லால் தாக்கிய மனைவி கைது

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அடுத்த நத்தமேடு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு ராஜேஸ்வரி (35) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சக்திவேல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 22-ந் தேதி இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வரி கணவன் என்றும் பாராமல் தகாத வார்த்தையால் திட்டி, கையால் அடித்து கீழே தள்ளினார். மேலும் கல்லால் தாக்கியதில் சக்திவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சக்திவேல் பொம்மிடி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்