தமிழக செய்திகள்

தம்பதி மீது தாக்குதல்

தம்பதியை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

மானூர்:

மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70), காவலாளி. இவரது வீட்டு கழிவு நீர் செல்லும் ஓடையை பக்கத்து வீட்டைச் சேர்ந்த காளிராஜ் (47) என்பவர் மண்ணால் அடைத்து இருந்தார். இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது. இதையறிந்த ராமசாமியின் மனைவி ராதா (67) மண்வெட்டியால் கழிவுநீர் அடைப்பை சரிசெய்தார். இதை பார்த்த காளிராஜ், ராதாவிடம் வாக்குவாதம் செய்து தாக்கினார். இதை தட்டிக்கேட்ட ராமசாமியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்