தமிழக செய்திகள்

மனைவியை தாக்கி கொலை மிரட்டல்

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எலக்ட்ரீஷியனை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

விழுப்புரம்

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிஇந்திரன் (வயது 35) எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி மகாலட்சுமி(30). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. திருமணநாள் முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மகாலட்சுமி தனது சித்தப்பா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறேன் எனக்கூறியபோது ஜோதிஇந்திரன் மறுப்பு தெரிவித்து அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மகாலட்சுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிஇந்திரனை கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்