நாமக்கல் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு வந்து புதுமண தம்பதி, தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர்.
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் அவரது மகன் ராகுல் சரத் ஆகிய மூவரும் வரிசையில் இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “மக்கள் எங்கிருந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது முக்கிய கடமை. 100% வாக்கு அவசியம். எனது மகன் முதல் முறையாக வாக்கு செலுத்தி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது” என்று கூறினார். விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நான் இங்கு ஓட்டு போட தான் வந்திருக்கிறேன் யாரைப் பற்றியும் பேச வரவில்லை என்று கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் தனது குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதி ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை - திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அடையாள அட்டை இல்லாமல் வாக்களிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்ட, திமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததால், கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தினர்.
மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை மேல்நிலைபள்ளியில், தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன், தனது வாக்கை பதிவு செய்தார்.
கோயம்பேடு வாக்குச்சாவடியில் மத்திய இணை மந்திரி டாக்டர் எல்.முருகன் ஜனநாயக கடமையாற்றினார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:- (காலை 9 மணி நிலவரம்)
பதிவான வாக்குகள்: 1,01,44,028
மொத்த வாக்களர்கள்: 5,73,43,291
முன்னதாக 2021 ம் ஆண்டு நடந்த தேர்தலில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. (வித்தியாசம் : 3.89 சதவீதம்)
நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் எப்படி ஜனநாயக கடமை ஆற்றியிருக்கிறோனோ, அதேபோல் தமிழக மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜனநாயக கடமையாற்றினார்.
சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது கணவர் சவுந்தரராஜன் மற்றும் மகளுடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார்.
சேலம், சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது வாக்கைச் செலுத்தினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர், “இந்த முறை இளம் வாக்காளர்கள் காட்டியுள்ள ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். அவர்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன், ஆனால் அவர்கள் ஒரு நிலையான அரசாங்கத்திற்கும், வளர்ச்சிக்கும், நலத்திட்டங்களுக்கும் வாக்களிக்க வேண்டும். அவர்களால் ஒரு கற்பனையான யோசனைக்கு வாக்களிக்க முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசால் வழங்கப்பட்ட நிலையான அரசாங்கம், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காகவே அவர்கள் வாக்களிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து வழங்குவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தொடர்ந்து வழங்குவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், இளைஞர்கள் மதச்சார்பின்மைக்கும் முன்னேற்றத்திற்கும் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்; குறிப்பாக தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மந்தவெளிப்பாக்கம் ஸ்ரீ ராஜலட்சுமி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு மற்றும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி ஆகியோர் ஜனநாயக கடமையாற்றினர்.
நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜனநாயக கடமையாற்றினார்.
நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் அஜித்குமார் காலை 6.55 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்துள்ளார். வாக்களிக்க வந்த நடிகர் அஜித்குமார் வெள்ளை நிற கோட் சூட் அணிந்திருந்தார். வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை நடிகர் அஜித்குமார் காண்பித்தார். நடிகர் அஜித்தை காண தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.
தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அனைவரும் வந்து வாக்களிப்பதற்கான வேண்டுகோளை தேர்தல் ஆணையம் வகுத்தளித்துள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தங்களின் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நேரடியாக பார்வையிட முடியும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.
நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.
இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்துவிட்டால், டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்று வாக்களிக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க முடியாது.
தமிழக சட்டமன்றத்திற்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. இதன்படி 4 முனைப்போட்டிநிலவுகிறது. இந்த தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக அனல் பறந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
தமிழக சட்டமன்றத்திற்கு ஒரேகட்டமாக இன்று (23.04.2026) தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்நிலையில், காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற 3 அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருந்தனர்.
குறிப்பிட்ட சின்னத்தின் எதிரே உள்ள பட்டனை அழுத்தினால் அதே சின்னத்திற்குதான் ஓட்டு விழுகிறதா? என்பதையும், அந்த சின்னம்தான் விவி பாட் எந்திரத்தில் தெரிகிறதா? என்பதையும் உறுதி செய்து வருகின்றனர். இப்படி 50 ஓட்டுகள் வெவ்வேறு சின்னத்தில் போட்டு சோதனை செய்யப்படுகிறது.
பின்னர் அவை எண்ணி பார்க்கப்படும். பதிவான வாக்குகளும், எண்ணப்படும் வாக்குகளும் சரியான கணக்கில் இருக்கும்பட்சத்தில் மாதிரி வாக்குப்பதிவு நிறைவு பெறும்.