தமிழக செய்திகள்

செய்தியாளரை தாக்கிய உதவி ஆய்வாளர், காவலர் - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி

செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

தினத்தந்தி

தென்காசி,

செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த செய்தியாளரை, பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் தாக்கியதாக கூறி மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஆணையம், உதவி ஆய்வாளர் 2 லட்சம் ரூபாய், காவலர் ஒரு லட்சம் என மொத்தம் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், அந்த பணத்தை பாதிக்கப்பட்ட செய்தியாளருக்கு இழப்பீடாக வழங்கும்படி தீர்ப்பளித்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்