தமிழக செய்திகள்

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்கின்றார்களா எனவும், தமிழக அரசின் இன்னூயிர் காப்போம் திட்டத்தை சரியாக பயன்படுத்தி வருகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு புறநோயாளிகளிடமும், அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் தங்கி உள்ள அனைத்து வார்டுகளுக்கு நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். கொரோனா நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளிக்கும் வகையில் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவமனை பகுதிகளை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் எனவும் டாக்டர்களிடம் கூறினார்.

இந்த ஆய்வின் போது டாக்டர்கள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை