தமிழக செய்திகள்

எட்டயபுரத்தில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எட்டயபுரம்:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக எட்டயபுரம் பஸ் நிலையம் எதிரே பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எட்டயபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், மகளிர் உரிமை தொகை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்கி, தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இளம்புவனம் கிளைச் செயலாளர் கருப்பசாமி, ஆட்டோசங்க தலைவர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஆதீஸ்வரன் உள்பட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு