தமிழக செய்திகள்

கட்டிட தொழிலாளி வீட்டில்நகை, பணம் திருட்டு

உடன்குடியில் கட்டிட தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிட மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வன் (45). கட்டிடதொழிலாளி. இவர் கடந்த 25-ந்தேதி வீடு அருகிலுள்ள கோவிலில் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தாராம். இதை நோட்டமிட்ட மர்மநபர் அவரது வீட்டிற்குள் புகுந்து, பீரோவிலிருந்த ரூ.1.60 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்