தமிழக செய்திகள்

கோபி உழவர் சந்தையில், கடந்த மாதம் ரூ.79¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

கோபி உழவர் சந்தையில், கடந்த மாதம் ரூ.79¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

கோபி

கோபி அருகே உள்ள மொடச்சூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு நாதிபாளையம், சுண்டப்பாளையம், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 802 விவசாயிகள் 2 லட்சத்து 97 ஆயிரத்து 50 கிலோ காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.79 லட்சத்து 17 ஆயிரத்து 507-க்கு விற்பனை ஆனது. மொத்தம் 31 ஆயிரத்து 885 பேர் காய்கறிகளை வாங்கி சென்று உள்ளனர்.

இந்த தகவலை கோபி உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...