தமிழக செய்திகள்

தம்பதி மீது தாக்குதல்

நெல்லை அருகே தம்பதியை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் தெற்கூர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 59). இவர் கீழநத்தம் பகுதியில் டீக்கடை வைத்து உள்ளார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் சித்திரை என்பவர் நடராஜன் மற்றும் அவரின் மனைவி நாச்சியார் ஆகியோரிடம் தகராறு செய்து, தாக்கி கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடராஜன் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், சித்திரை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்