காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த அரங்காபுரம் ஆரம்பப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயாம்மாள் விஜயராகவன் தலைமை தாங்கினார்.
5 வயது முடிந்த மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஜூன் 13-ந் தேதி முதல் நடைபெறும் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.