தமிழக செய்திகள்

விழிப்புணர்வு கருத்தரங்கு

களக்காடு கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

களக்காடு:

களக்காடு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் மேக்ஸ்வின் ஹெல்த் சென்டர் சார்பில் நோயற்ற வாழ்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி சேர்மன் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். முதல்வர் குமரேசன், நிர்வாக அதிகாரி டேனியல் ராஜதுரை, கருத்தாளர் கிறிஸ்துதாஸ், சுகாதார பயிற்சியாளர் தேவ அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். 

SCROLL FOR NEXT