தமிழக செய்திகள்

100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு தமிழரசி எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்

மானாமதுரையில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தமிழரசி எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்.

தினத்தந்தி

மானாமதுரை

மானாமதுரை சமத்துவபுரத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் பூசி வளைகாப்பை நடத்தினார். கர்ப்பிணிகளுக்கு வளையல், ஜாக்கெட் துணி, சில்வர் தட்டு மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் 5 வகையான சாதங்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி, செய்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சுப்ரமணி, மானாமதுரை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்